சூலூர் அருகே பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பள்ளி மாணவிகள் சனிக்கிழமை விழிப்புணர்வுப் பேரணி சென்றனர்.
சூலூர் அருகே உள்ள மைக்கேல் ஜாப் பள்ளி, காவல் துறையினர் இணைந்து இப்பேரணியை நடத்தினர். சூலூர் குளக்கரையிலிருந்து முத்துக்கவுண்டன் புதூர் வரையிலும் பேரணி நடத்தப்பட்டது. பேரணியை மைக்கேல் ஜாப் பள்ளி துணை செயல் அதிகாரி மேத்யூ வினோத் பிரான்சிஸ் துவக்கி வைத்தார்.
சூலூர் காவல் ஆய்வாளர் தங்கராஜ், உதவி ஆய்வாளர் குமரேசன், ஆபிரகாம் கென்னடி, பாண்டியராஜ் போக்குவரத்து உதவி ஆய்வாளர் மருதையபாண்டியன், காவலர்கள் மாரப்பன், சிறப்புப் பிரிவு காவலர் செந்தில் ஆகியோர் கலந்து கொண்டனர். காவல் ஆய்வாளர் தங்கராஜ் பெண்களின் பாதுகாப்பு குறித்து மாணவிகளிடம் பேசினார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டனர்.