கோயம்புத்தூர்

பெண்ணிடம் நகைப் பறித்த இளைஞர் கைது

DIN

பெருமாநல்லூர் அருகே மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணிடம் நகைப் பறித்த இளைஞரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
பெருமாநல்லூர் அருகே மொய்யாண்டம்பாளையம், வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி (60). இவரது மனைவி சரஸ்வதி (56). இவர் கடந்த மாதம் தனது வீட்டின் அருகே  உள்ள தோட்டத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் சரஸ்வதி அணிந்திருந்த 5 பவுன் நகையைப் பறித்துச் சென்றார்.
இது குறித்து பெருமாநல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், பெருமாநல்லூர் போலீஸார் குன்னத்தூர் சாலையில் சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜசேகரன் (27) என்பதும், இவர் சரஸ்வதியிடம் நகைப் பறித்தது தெரியவந்தது.  இதையடுத்து, பெருமாநல்லூர் போலீஸார் ராஜசேகரைக் கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT