கோயம்புத்தூர்

அத்திவரதர் குறித்து அவதூறு: பாஜகவினர் புகார்

DIN

சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் அத்திவரதர் குறித்து தவறான தகவல்களை பரப்பும் வகையில் அவதூறு கருத்துகளை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக சார்பில் காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.
சூலூர் அருகே கண்ணாம்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணை அமைப்பினர் தகவல் பலகையை நிறுவி தினமும் அதில் சில தகவல்களை எழுதி வருகின்றனர்.
இந்நிலையில், அத்திவரதப் பெருமாளை கிண்டல் செய்யும் வகையில் சில வாசகங்கள் தகவல் பலகையில் எழுதப்பட்டுள்ளன. இது குறித்து பாரதிய ஜனதா கட்சியின் கோவை வடக்கு மாவட்ட ஓ.பி.சி. பிரிவுத் தலைவர் முருகேசன் தலைமையில் அக்கட்சியினர் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
பின்னர் அவர்கள் கூறியதாவது:
இந்துக்களின் மனம் புண்படும் வகையிலும், இந்துமத நம்பிக்கையை அவமதிக்கும் வகையிலும் தகவல் பலகையில் கருத்துகள் இடம்பெற்றுள்ளன. அதனை எழுதியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன் ஆரம்..!

அமரன் வெளியீடு எப்போது?

செவ்வாய்க் கோளில் வசிக்கப் போகும் 4 மனிதர்கள்! உண்மைதானா?

தக் லைஃப்பில் பாலிவுட் பிரபலங்கள்!

குட்காவை பதுக்கி விற்பனை செய்த மளிகைக் கடைக்காரா் கைது

SCROLL FOR NEXT