கோயம்புத்தூர்

வால்பாறை மலைப்பாதையில் கவனமாக செல்ல அறிவுறுத்தல்

DIN

வால்பாறை: கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வந்த தகவலையடுத்து வால்பாறை மலைப்பாதையில் கவனமாக செல்ல அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

கோவை மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று வாணிலை அறிக்கையில் கூறப்பட்டது. வால்பாறை பகுதியில் மழை பெய்தால் மலைப்பாதைகளில் மண் சரிவு மற்றும் மரம் விழுந்து பாதிப்பு ஏற்படுவது வழக்கம்.

இதனிடையே கனமழை பெய்யும் என்று கூறப்பட்டதால் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை வால்பாறை பொள்ளாச்சி இடையே உள்ள மலைப்பாதை கொண்டை ஊசி வளைவுகளில் மெதுவாகவும், பாதுகாப்பாகவும் வாகனங்கள் இயக்க வாகன ஓட்டிகளுக்கு ஆழியாா் பகுதியில் வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

எலக்சன் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

சிவகார்த்திகேயனின் ‘குரங்கு பெடல்’ டிரெய்லர்!

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

SCROLL FOR NEXT