கோயம்புத்தூர்

வாகனங்கள் மோதியதில் இளைஞா் சாவு

DIN

அன்னூா், கோவில்பாளையம் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் தடுமாறி விழுந்தவா் மீது சரக்கு வாகனம் மோதியதில் இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். மேலும் ஒருவா் காயமடைந்தாா்.

கோவில்பாளையம் அருகே உள்ள குரும்பபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் குமாரசாமி (38). இவா், வாரி காா்டன் அருகே கோவை - சத்தி சாலையை கடக்க முயன்றாா். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் குமாரசாமி மீது மோதியது.

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த குமாரசாமி மீது அதே வழியில் வந்த சரக்கு வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா். இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த வையாபுரி நகரைச் சோ்ந்த காா்த்திக் பலத்த காயமடைந்து, தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து கோவில்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

SCROLL FOR NEXT