கோயம்புத்தூர்

கைத்தறிக்கு ஒதுக்கப்பட்ட சேலையை  விசைத்தறியில் உற்பத்தி செய்தவர் மீது வழக்கு

DIN

அன்னூர் அருகே எல்லப்பாளையத்தில் கைத்தறிக்கு ஒதுக்கப்பட்ட சேலையை விசைத்தறியில் உற்பத்தி செய்தவர் மீது செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
அன்னூர் அருகே உள்ள எல்லப்பாளையம், மாரியம்மன் கோயில்  வீதியைச் சேர்ந்தவர் சண்முகம் (50). இவர் கைத்தறிக்கு ஒதுக்கப்பட்ட சேலை ரகத்தை விசைத்தறியில் உற்பத்தி செய்து வருவதாக திருப்பூர் கைத்தறி அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.  இதையடுத்து உதவி இயக்குநர் அம்சவேணி தலைமையிலான அதிகாரிகள் எல்லப்பாளையம் சண்முகம் விசைத்தறிக் கூடத்தில் சோதனை செய்தனர்.  அப்போது அங்கு கைத்தறிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட சேலை ரகத்தை விசைத்தறியில் உற்பத்தி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து  உதவி அமலாக்கத் துறை அலுவலர் அம்சவேணி அளித்த புகாரின்பேரில், சண்முகம் மீது அன்னூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

SCROLL FOR NEXT