பொள்ளாச்சியில் தென்னை நார் தொழிற்சாலை இயந்திரத்தில் சிக்கி பெண் உயிரிழந்தார்.
பொள்ளாச்சி, கோவை சாலை சேரன் நகரைச் சேர்ந்தவர் செல்வராஜ். சாத்துப்பாறை சித்தூரில் தென்னை நார் தொழிற்சாலை வைத்துள்ளார்.
இத்தொழிற்சாலையில், பொள்ளாச்சி, நல்லூர் முருகன் நிலையத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜனின் மனைவி சகுந்தலா பணிபுரிந்து வந்துள்ளார்.
இவர், தென்னைநார் தொழிற்சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு பணியில் இருந்தபோது, எதிர்பாராதவிதமாக நார் பிரிக்கும் இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்தார்.
இதுகுறித்து பொள்ளாச்சி தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.