கோவையில் இளைஞரிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (27). இவர் கோவையில் தங்கி இங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் வெள்ளலூர் சாலையில் புதன்கிழமை இரவு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ராஜ்குமாரிடம் முகவரி கேட்பதுபோல நடித்து, அவர்அணிந்திருந்த இருந்து 1 பவுன் நகை, செல்லிடப்பேசி ஆகியவற்றை பறித்துச் சென்றார். இதுகுறித்து ராஜ்குமார் அளித்தப் புகாரின்பேரில் போத்தனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.