உணவு பாதுகாப்புத் துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை சார்பில் மேட்டுப்பாளையம் பிளாக்தண்டர் நுழைவு வாயில் முன் ஒரு மாதம் நடைபெற உள்ள உணவுப் பொருள்களில் கலப்படம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. உணவு பாதுகாப்பு அலுவலர் ஆறுச்சாமி தலைமை வகித்தார். உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சண்முகம், சிவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பிளாக் தண்டர் மேலாளர் கர்னல் பால் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று நிகழ்ச்சியை ரிப்பன் வெட்டி துவங்கி வைத்தார். இதில் பிளாக்தண்டர் கணக்காளர் கண்ணன், கொள்முதல் மேலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொறியாளர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.