கோயம்புத்தூர்

சூலூரில் 39 பயனாளிகளுக்கு அம்மா இரு சக்கரவாகனம்

DIN

சூலூர் பேரூராட்சி அலுவலகத்தின் முன் அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சூலூர் சட்டப் பேரவை உறுப்பினர் ஆர்.கனகராஜ் தலைமை வகித்தார். சூலூர் நகர செயலாளர் கார்த்திகை வேலன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் 39 பயனாளிகளுக்கு அம்மா இரு சக்கரவாகனங்கள் வழங்கப்பட்டன. 
இதையடுத்து சூலூர் அருகே ரூ.12 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்தார். பின் நியாய விலைக்கடையில் பொங்கல் பரிசு வழங்கும் பணியைத் துவக்கி வைத்தார்.
விழாவில் அதிமுக எம்ஜிஆர் மன்ற செயலாளர் தோப்பு அசோகன், சூலூர் ஒன்றியச் செயலாளர் மாதப்பூர் பாலு, ஏ.பி.அங்கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை சூலூர் பேரூராட்சி செயல் அலுவலர் தனசேகர் செய்திருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேலிக்காளாகும் ஜனநாயகம்!

ராஜ‌‌ஸ்​தா​னி‌ல் ஒரே க‌ல்லில் 18 அடி உயர காளி சிலை வடி‌ப்பு

மனித சக்தியைப் பாடிய பாவேந்தர்!

ராமா் திருக்கல்யாண வைபவம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

அரசுப் பள்ளிகளில் அக்கறை காட்டுவோம்

SCROLL FOR NEXT