அரசூர் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக கீழ்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின் வாரியம் அறிவித்துள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்: அரசூர், பொத்தியாம்பாளையம், குரும்பபாளையம், தென்னம்பாளையம், செங்கோடகவுண்டன்புதூர், செல்லப்பம்பாளையம், பச்சாபாளையம், வடுகபாளையம், சங்கோதிபாளையம், சமத்துவபுரம், அன்பு நகர், அன்னூர் சாலை, பொன்னாண்டம்பாளையம் மற்றும் மோளபாளையம்.