கோயம்புத்தூர்

அனுமதியின்றி மது விற்ற 3 பேர் கைது

DIN

சூலூர் அருகே உள்ள பள்ளபாளையத்தில் அரசு அனுமதியின்றி மது விற்ற 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சூலூர் வட்டாரப் பகுதிகளில் அனுமதியின்றி மது விற்கப்படுவதாக போலீஸாருக்கு ஏராளமான புகார்கள் வந்தன. அதையடுத்து பள்ளபாளையம் பகுதியில் ரோந்துப் பணியில் போலீஸார் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, அப்பகுதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த பாரதிபுரத்தைச் சேர்ந்த கதிரேசன் (49), ராமநாதபுரம் மாவட்டம், சிறு மலைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் (28), சிவகங்கை மாவட்டம், மாராமங்கலம் பகுதியைச் சேர்ந்த டேவிட் (31) ஆகியோர் அப்பகுதியில் அனுமதியின்றி மதுவிற்றது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, அவர்களை போலீஸார் கைது செய்து நிபந்தனை ஜாமீனில் விடுவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

அணியை சரிவிலிருந்து மீட்ட வெங்கடேஷ் ஐயர்; மும்பைக்கு 170 ரன்கள் இலக்கு!

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

SCROLL FOR NEXT