கோயம்புத்தூர்

கத்தியைக் காட்டி பணம் பறிப்பு: 3 பேர் மீது வழக்குப் பதிவு

DIN


கோவை அருகே சாலையில் நடந்த சென்று கொண்டிருந்தவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த மூன்று பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம், இவரது மகன் ஹரி (37). இவர் வெள்ளிக்கிழமை இடையர்பாளைத்தில் உள்ள அம்மன் கோயில் மைதானம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
 அப்போது அங்கு வந்த உத்தமபாளையத்தைச் சேர்ந்த பரமசிவம் மகன் சிவா (24), சாத்தான்குளத்தைச் சேர்ந்த முருகன் மகன் உமாசங்கர் (32), மதுரை மேலவாசலைச் சேர்ந்த சுப்பிரமணியம் மகன் விக்னேஷ் (24). ஆகியோர் ஹரியை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி பணம் மற்றும் கை கடிகாரத்தை பறித்துச் சென்றனர்.
 இதுகுறித்து ஹரி அளித்த புகாரின் பேரில் மூன்று பேர் மீது துடியலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT