கோயம்புத்தூர்

கோவை மாவட்டத்தில் சோதனை: ஒரே நாளில் ரூ.8.50 லட்சம் பறிமுதல்

DIN


கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சனிக்கிழமை மேற்கொண்ட சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.8.50 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
 மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழுவினர், வாக்காளர்களுக்கு பணம் கொண்டுச் செல்லப்படுவதைத் தடுக்க தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கோவை கருப்பகவுண்டர் வீதியில் எம்.கனகராஜ் தலைமையிலான பறக்கும்படை அதிகாரிகள் சனிக்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 
அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மாணிக்கம் (29) என்பவரை தடுத்து சோதனையிட்டனர். அவரிடம் ரூ.5 லட்சம் ரொக்கம் இருந்துள்ளது. இருப்பினும் அந்தத் தொகைக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் மாநகராட்சி தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.  முதற்கட்ட விசாரணையில் மாணிக்கம் நகைப் பட்டறையில் கூலி வேலை செய்து வருவது தெரியவந்துள்ளது. 
இதேபோல, மாவட்ட நிலையான கண்காணிப்புக் குழுவினர் தொண்டாமுத்தூரில் நடத்திய சோதனையில் ரூ.82 ஆயிரமும், கிணத்துக்கடவில் ரூ.1.32 லட்சமும், வால்பாறையில் ரூ.1.47 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT