கோயம்புத்தூர்

மாரியம்மன் கோயிலுக்கு முளைப்பாரி ஊர்வலம்

DIN


மேட்டுப்பாளையம் மைதானம் மாரியம்மன் கோயிலின் 91 ஆம் ஆண்டு குண்டம் திருவிழாவையொட்டி அம்மனுக்கு முளைப்பாரி ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது. 
மேட்டுப்பாளையம் நகராட்சி 7ஆவது வார்டில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து 500க்கு மேற்பட்ட மக்கள் விரதமிருந்து முளைப்பாரியை ஊர்வலவமாக எடுத்து வந்தனர். 
அப்போது பக்தர்கள் பச்சகாளி, பவழக்காளி, பெருமாள், சிவன், பார்வதி, கருப்பராயன் உள்ளிட்ட சுவாமிகளின் வேடமணிந்து ஊர்வலமாக வந்து மைதானம் மாரியம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர். 
இதைத் தொடர்ந்து 500 இளநீர் கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் அறங்காவலர்கள் வெள்ளியங்கிரி, பாலன் மற்றும் வார்டு மக்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியீடு: 94.56% பேர் தேர்ச்சி!

SCROLL FOR NEXT