மழை பெய்யாத காரணத்தால் சோலையாறு அணையின் நீர்மட்டம் 14.24 அடியாக குறைந்துள்ளது.
கடந்த 8 மாத காலத்தில் வால்பாறை வட்டாரத்தில் சுமார் 10 தினங்கள் மட்டுமே மழை பெய்துள்ளது. கடந்த காலங்களைவிட இந்த ஆண்டு வெயில் அதிகரித்து தொடர்ந்து வெப்பமாகவே காணப்படுகிறது. இதனால் அனைத்து ஆறுகளும் வறண்டு காணப்படுகின்றன.
ஆழியாறு, பரம்பிக்குளம் நீர்ப்பாசனத் திட்டத்தின் முக்கிய அணையாக கருதப்படும் சோலையாறு அணையின் நீர்மட்டம் கடந்த சில மாதங்களாக குறைந்து வருகிறது.
தற்போது அணையின் நீர்மட்டம் 14.24 அடியாக உள்ளது. கடந்த சிலமாதங்களாக மின் உற்பத்தியும் நிறுத்தப்பட்டுள்ளது.