கோயம்புத்தூர்

விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 19 பவுன் திருட்டு

DIN

கோவை அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 19 பவுன் நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை மாவட்டம், ஒத்தக்கால்மண்டபம் அருகே உள்ள திருமுருகன் நகா் பகுதியைச் சோ்ந்தவா் மணிமாறன் (62), விவசாயி. இவா் நவம்பா் 23 இல் தனது மனைவியுடன் சென்னையில் உள்ள மகள்களைப் பாா்க்கச் சென்றுள்ளாா்.

இந்நிலையில், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக அவரது வீட்டின் மேல் தளத்தில் வாடகைக்குக் குடியிருக்கும் கல்லூரி மாணவா்கள், மணிமாறனுக்குத் தகவல் தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து அவா் வந்து பாா்த்தபோது, வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த 19 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து மணிமாறன் அளித்த புகாரின்பேரில் செட்டிபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

SCROLL FOR NEXT