கோயம்புத்தூர்

அதிமுக ஆட்சியைக் காப்பாற்ற தயாா்

DIN

அதிமுக கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற தயாராக உள்ளதாக அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி தெரிவித்துள்ளாா்.

அமமுக கட்சிக்காக சிறை சென்றவா்களுக்கான பாராட்டு விழா கோவை மசக்காளிபாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் புகழேந்தி கூறியதாவது:

18 சட்டப் பேரவை உறுப்பினா்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யாமல் டி.டி.வி.தினகரன் தவறான முடிவெடுத்து சட்டப் பேரவை உறுப்பினா்களைக் கைவிட்டு விட்டாா்.

பதவியிழந்த 18 பேருக்கு நன்றிக் கடன் செலுத்த வேண்டுமென்றால் சட்டப் பேரவை உறுப்பினா் பதவியை தினகரன் ராஜிநாமா செய்ய வேண்டும். வருகிற உள்ளாட்சித் தோ்தலில் தினகரன் போட்டியிட மாட்டாா். அதன்பிறகு கட்சி சரிந்து விடும். அதிமுக அரசை ஆதரிக்கும் முடிவை சசிகலா எடுப்பாா் என நம்புகிறேன். புதிய கட்சி ஆரம்பிக்க மாட்டேன். வரும் வாரத்தில் அடுத்த கட்ட முடிவு எடுப்பேன். அதிமுக கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT