கோயம்புத்தூர்

கோவையில் நாளை ஊழல் எதிர்ப்பு இயக்க கருத்தரங்கம்

DIN

கோவையில், ஊழல் எதிர்ப்பு இயக்கம் சார்பில் ஊழலில் இருந்து தமிழ்நாட்டைக் காப்போம் என்ற கருத்தரங்கம் சனிக்கிழமை (செப்டம்பர் 14) தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது.
கோவையில், ஊழல் எதிர்ப்பு இயக்கம் சார்பில் ஆண்டுதோறும் ஊழலுக்கு எதிராக கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகிறது. இக்கருத்தரங்கில் அரசுத் துறைகளில் நேர்மையாகப் பணியாற்றி வரும் அரசு அதிகாரிகள், அலுவலர்களை கெளரவித்து பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. 
இந்நிலையில், ஊழலில் இருந்து தமிழ்நாட்டைக் காப்போம் என்ற பெயரில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை கருத்தரங்கம் நடைபெற உள்ளது. காலை 10 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 1.30 மணி வரையிலும் கருத்தரங்கம் நடைபெற உள்ளதாகவும், நடப்பு ஆண்டிலும் நேர்மையாகப் பணியாற்றிய 15 அரசு அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படவுள்ளதாக ஊழல் எதிர்ப்பு இயக்கச் செயலாளர் என்.கே.வேலு தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT