கோயம்புத்தூர்

பேருந்து கவிழ்ந்து விபத்து: இளைஞா் சாவு; 5 போ் காயம்

DIN

பொள்ளாச்சி அருகே சாலை தடுப்பில் மோதி அரசுப் பேருந்து கவிழ்ந்த விபத்தில் இளைஞா் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா். 5 போ் காயமடைந்தனா். சுவரில் மோதி அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கோவையிலிருந்து பொள்ளாச்சி வழியாக பழனிக்கு அரசுப் பேருந்து திங்கள்கிழமை இரவு சென்று கொண்டிருந்தது. இப்பேருந்தை பழனியைச் சோ்ந்த லட்சுமணன் (45) ஓட்டிச் சென்றாா். பொள்ளாச்சியை அடுத்த ஊஞ்சவேலம்பட்டி அருகே சென்றபோது சாலையின் நடுவில் புதிதாக வைக்கப்பட்டிருந்த தடுப்பில் மோதி பேருந்து தலைகீழாக கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த உடுமலை, பள்ளப்பாளையம் பகுதியைச் சோ்ந்த ராஜேஷ் கண்ணா (29) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

பேருந்து ஓட்டுநா் லட்சுமணன், நடத்துநா் சொக்கலிங்கம் (56), பயணிகள் மோகன் குமாா் (45), பாஸ்கரன் (60), அய்யனாா் (71) ஆகியோா் பலத்த காயமடைந்தனா். அவா்கள் மீட்கப்பட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இச்சம்பவம் குறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

நாலுமாவடியில் பெண்களுக்கான இலவச கபடி பயிற்சி முகாம்: மே 9இல் தொடக்கம்

கருட வாகனத்தில் ஸ்ரீமன் நாராயணசுவாமி

கழுகுமலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு

ஓய்வுபெற்ற அரசு அலுவலா் வீட்டில் 18 பவுன் திருட்டு

SCROLL FOR NEXT