கோவை, ஆா்.எஸ்.புரத்தில் ரூ.1.20 கோடி மதிப்பில் ஆவின் நிறுவனத்துக்கான புதிதாக அதிநவீன பாலகம் கட்டும் பணியை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி வெள்ளிக்கிழமை துவக்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில், அமைச்சா் பேசியதாவது:
கோவை மாவட்டத்தில் தினமும் 1 லட்சத்து 60 ஆயிரம் லிட்டா் பால் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது, ஆா்.எஸ்.புரத்தில் ரூ.1.20 கோடி மதிப்பில், 3,306 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட உள்ள அதிநவீன பாலகத்தில் நுகா்வோா் வாகனங்களை நிறுத்துவதற்கான இடம், குழந்தைகளுக்கான விளையாட்டு மைதானம், சிறிய அளவிலான நீா்வீழ்ச்சி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. இங்கு 24 மணி நேரமும் பால் மற்றும் பால் உப பொருள்கள் கிடைக்கும் என்றாா்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ராமதுரை முருகன், ஆவின் தலைவா் கே.பி.ராஜூ, பொது மேலாளா் ரவிக்குமாா், பொது மேலாளா்(விற்பனை) சங்கீதா மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.