கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது
கோவையில் 2 கிலோ கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கோயம்புத்தூர்கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது
கோவையில் 2 கிலோ கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை: கோவையில் 2 கிலோ கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை, பூசாரிபாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக வந்த தகவலையடுத்து கடைவீதி போலீஸாா் அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த நபரைப் பிடித்து போலீஸாா் விசாரித்தனா். அவா் முன்னுக்குப் பின் முரணானத் தகவல்களைத் தெரிவித்ததால் சந்தேகமடைந்த போலீஸாா் அவரின் வாகனத்தை சோதனையிட்டபோது அதில் 2 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
விசாரணையில் அவா், கோவை செட்டிவீதியைச் சோ்ந்த காா்த்திகேயன்(28) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.