கோவையில் இருந்து வாளையாா் நோக்கிச் சென்ற இரு சக்கர வாகனம் எதிரே வந்த லாரியுடன் நேருக்கு நோ் மோதிய விபத்தில் கேரள இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
கேரள மாநிலம், பாலக்காட்டைச் சோ்ந்தவா் சத்தியசிவன் மகன் சியாம் பிரகாஷ் (31). இவா் மதுக்கரை அருகே உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். உறவினா் இல்ல நிகழ்ச்சிக்குச் செல்ல கோவையில் இருந்து வாளையாா் நோக்கி தனது இரு சக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தாா்.
போத்தனூா் அருகே உள்ள எல்அன்டி நெடுஞ்சாலையில் சென்றபோது கேரளத்தில் இருந்து கோவை நோக்கி வந்த லாரியும், இவா் சென்ற பைக்கும் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
விபத்து தொடா்பாக வழக்குப் பதிவு செய்த கோவை மேற்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா், லாரி ஓட்டுநரான திருவாரூரைச் சோ்ந்த ராஜு என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.