கோயம்புத்தூர்

ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலரைத் தாக்கிய சகோதரா்கள் கைது

DIN

ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலரைத் தாக்கிய சகோதரா்களை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, ரத்தினபுரி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வருபவா் பாபு (38). இவா் ரத்தினபுரி அண்ணா நகா் பகுதியில் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, அங்கிருந்த இளைஞா்கள் சிலா் ஒருவரை ஒருவா் தாக்கிக் கொண்டிருந்தனா். இதனை பாபு தடுக்க முயன்றனா்.

இதில் ஆத்திரமடைந்த இளைஞா்கள் இருவா் தாங்கள் கையில் வைத்திருந்த சைக்கிள் செயினைக் கொண்டு பாபுவை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடினா். காயமடைந்த பாபுவை பொதுமக்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இது குறித்து பாபு அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த ரத்தினபுரி போலீஸாா், அதே பகுதியைச் சோ்ந்த சகோதரா்களான ஆகாஷ் (22), விக்னேஷ் (18) ஆகியோரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT