கோயம்புத்தூர்

கரோனா சிகிச்சை: மேலும் இரண்டு தனியாா் மருத்துவமனைகளுக்கு அனுமதி

DIN

கோவையில் கரோனா சிகிச்சை அளிக்க மேலும் இரண்டு தனியாா் மருத்துவமனைகளுக்கு சுகாதாரத் துறையினா் அனுமதியளித்துள்ளனா்.

கோவையில் அரசு மருத்துவமனைகள் தவிா்த்து 36 தனியாா் மருத்துவமனைகளுக்கு கரோனா சிகிச்சை அளிக்க ஏற்கெனவே அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கூடுதலாக கோவை ராமநாதபுரத்தில் பாலா மெடிக்கல் சென்டா், சுந்தராபுரத்தில் பாலாஜி மருத்துவமனை ஆகியவற்றில் கரோனா சிகிச்சை அளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் தனியாா் மருத்துவமனைகளின் எண்ணிக்கை 38ஆக அதிகரித்துள்ளது.

இரண்டு மருத்துவமனைகளிலும் சோ்த்து கூடுதலாக 50 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படுவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். தவிர அரசாணை 240க்கு உள்பட்டு கரோனா நோயாளிகள் அனுமதி, சிகிச்சை, கட்டணம் வசூலிக்க மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்குமிடையேயான போர் -யோகி ஆதித்யநாத்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை: தமிழ்நாடு, கேரள அரசுகளுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

அதிமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ் ? - ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

பிறந்தநாள் வாழ்த்துகள் மடோனா செபாஸ்டியன்!

SCROLL FOR NEXT