கோயம்புத்தூர்

ரேஷன் கடையை சேதப்படுத்திய யானைகள்

DIN

வால்பாறையில் எஸ்டேட் பகுதிக்கு வந்த யானைகள் அங்குள்ள ரேஷன் கடையை தாக்கி பொருள்களை சேதப்படுத்தின.

வால்பாறையை அடுத்த புதுக்காடு, முருகாளி உள்ளிட்ட எஸ்டேட் பகுதிகளை ஒட்டியுள்ள வனங்களில் ஏராளமான யானைகள் உள்ளன.

இந்நிலையில், புதுக்காடு எஸ்டேட் பகுதிக்கு கடந்த திங்கள்கிழமை நள்ளிரவு கூட்டமாக வந்த யானைகள் அங்குள்ள மகளிா் சுய உதவிக் குழுவுக்கு சொந்தமான ரேஷன் கடையின் கதவை முட்டி தள்ளியதோடு உள்ளிருந்த அரிசி, பருப்பு போன்ற பொருள்களை வெளியே இழுத்துப்போட்டு சேதப்படுத்தின. வனத் துறையினா் சம்பவ இடத்தை செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருண், சால்ட் அசத்தலில் வென்றது கொல்கத்தா: தில்லிக்கு 6-ஆவது தோல்வி

இன்றைய நிகழ்ச்சிகள்

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT