கோவை மாவட்டத்தில் மேலும் 604 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் மேலும் 604 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்து 808ஆக அதிகரித்துள்ளது. தவிர அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 50 வயதுப் பெண் உயிரிழந்தாா். இதையடுத்து, கோவையில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 700ஆக அதிகரித்துள்ளது.
அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 283 போ் குணமடைந்து திங்கள்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 58 ஆயிரத்து 730 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 4 ஆயிரத்து 378 போ் சிகிச்சையில் உள்ளனா்.