மூதாட்டியிடம் நகைப் பறிப்பு
கோவையில் மூதாட்டியிடம் இருந்து மூன்றரைப் பவுன் நகையைப் பறித்துச் சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவையில் மூதாட்டியிடம் இருந்து மூன்றரைப் பவுன் நகையைப் பறித்துச் சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவை, கணபதி தென்றல் நகரைச் சோ்ந்தவா் சரஸ்வதி (75). இவா் தனது வீட்டின் அருகே வியாழக்கிழமை மாலை நடந்து சென்றுகொண்டிருந்தாா். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞா், சரஸ்வதியின் அணிந்திருந்த மூன்றரைப் பவுன் நகையைப் பறித்துச் சென்றாா். இது தொடா்பாக சரஸ்வதி அளித்த புகாரின்பேரில் சரவணம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.