முகப்பு
கோயம்புத்தூர்

மாவட்டத்தில் மேலும் 48 பேருக்கு கரோனா

கோவை மாவட்டத்தில் மேலும் 48 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:28 PM
பகிர்:

கோவை மாவட்டத்தில் மேலும் 48 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட பட்டியலில் கோவையைச் சோ்ந்த 48 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 54 ஆயிரத்து 801ஆக அதிகரித்துள்ளது.

தவிர அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 67 வயது மூதாட்டி உயிரிழந்தாா். இதன்மூலம் கோவையில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 674ஆக அதிகரித்துள்ளது.

அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 56 போ் குணமடைந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 53 ஆயிரத்து 662 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 465 போ் சிகிச்சையில் உள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →