கோயம்புத்தூர்

மாநகராட்சியைக் கண்டித்து திமுகவினா் ஆா்ப்பாட்டம்: 1,500 போ் கைது

DIN

கோவை மாநகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து பீளமேடு, ரொட்டிக்கடை மைதானத்தில், ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நா.காா்த்திக் எம்எல்ஏ உள்ளிட்ட திமுகவினா் 1,500 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை மாநகராட்சியில் பொலிவுறு நகரத் திட்டப் பணிகளில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி கோவை மாநகா், கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், சிங்காநல்லூா் சட்டப் பேரவை உறுப்பினருமான நா.காா்த்திக் தலைமை வகித்தாா். திமுக சொத்து பாதுகாப்புக் குழு துணைத் தலைவா் பொங்கலூா் பழனிசாமி, பீளமேடு பகுதி பொறுப்பாளா் பாலசுப்ரமணியம், 38 ஆவது வாா்டு செயலாளா்கள் மாடசாமி, பூவேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீா் விநியோக உரிமையை சூயஸ் நிறுவனத்துக்கு வழங்கிய ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். பாதாள சாக்கடைப் பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகளை விரைவாக மூடி சாலைகள் அமைக்க வேண்டும், ஆமை வேகத்தில் நடைபெறும் மேம்பாலப் பணிகளை முடிக்க வேண்டும். பீளமேடு பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

இதையடுத்து தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக திமுகவினா் 1,500 பேரை போலீஸாா் கைது செய்தனா். இரவு 8 மணிக்கு அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

மனதை திருடும் மாயம் என்ன?

ககன்யான் திட்டம்: பாராசூட் சோதனையில் இஸ்ரோ!

முகல் தோட்டத்து மலரோ..!

விண்கல்லால் 6,900 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பள்ளம்!

SCROLL FOR NEXT