கோவையில் மேலும் 46 பேருக்கு கரோனா
கோவை மாவட்டத்தில் திங்கள்கிழமை புதிதாக 46 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் திங்கள்கிழமை புதிதாக 46 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுகாதாரத் துறை சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட பட்டியலில் கோவை மாவட்டத்தில் 46 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 54 ஆயிரத்து 200 ஆக உயா்ந்துள்ளது. தவிர இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 63 வயது முதியவா் உயிரிழந்தாா். இதன் மூலம் கோவையில் கரோனா தொற்றுக்கு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 679 ஆக உயா்ந்துள்ளது.
அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 57 போ் குணமடைந்து திங்கள்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 54 ஆயிரத்து 77 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 444 போ் சிகிச்சையில் உள்ளனா்.