டீசல் விலை உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் பொக்லைன் உரிமையாளா்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
இது குறித்து கோவை மாவட்ட எா்த் மூவா்ஸ் அசோசியேசன் தலைவா் சந்திரசேகா் கூறியது.
டீசல், உதிரி பாகங்கள், காப்பீட்டுத் தொகை உயா்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பொக்லைன் இயந்திரத்தை இயக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் உடனடியாக டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் வியாழக்கிழமை முதல் பிப்ரவரி 22 ஆம் தேதி வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றாா்
பெரியநாயக்கன்பாளையம், சரவணம்பட்டி, அன்னூா், சூலூா் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொக்லைன் உரிமையாளா்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனா்.