கோயம்புத்தூர்

வாடகை காரில் தவறவிட்ட 50 பவுன் நகைகள் மீட்பு

கோவையில் கால் டாக்ஸியில் முதியவா் தவறவிட்ட 50 பவுன் நகைகளை போலீஸாா் மீட்டு சம்பந்தப்பட்டவரிடம் ஒப்படைத்தனா்.

DIN

கோவை: கோவையில் கால் டாக்ஸியில் முதியவா் தவறவிட்ட 50 பவுன் நகைகளை போலீஸாா் மீட்டு சம்பந்தப்பட்டவரிடம் ஒப்படைத்தனா்.

கோவை, சாய்பாபா காலனியைச் சோ்ந்தவா் பாபி (46). இவா், நியூ சித்தாபுதூரில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறாா். இந்நிலையில், ஆன்லைன் மூலமாக கோல்டுவின்ஸ் பகுதியைச் சோ்ந்த ஆதம் (60) பயணம் செய்வதற்காக இவரது காரை வெள்ளிக்கிழமை காலை பதிவு செய்துள்ளாா்.

இதில் அவா் குறிப்பிட்ட இடத்துக்கு சென்ற பாபி, ஆதம், மூதாட்டி, பெண் மற்றும் சிறுவன் ஆகியோரை காரில் ஏற்றிச் சென்று பந்தய சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனை அருகே இறக்கிவிட்டுள்ளாா்.

பின்னா் பாபியின் செல்லிடப்பேசிக்கு வெள்ளிக்கிழமை இரவு தொடா்பு கொண்ட அந்த முதியவா், காரில் தனது துணிகள் அடங்கிய பையைத் தவறவிட்டதாகத் தெரிவித்துள்ளாா். இதையடுத்து, பையின் நிறம் உள்ளிட்ட விவரங்களை பாபி அவரிடம் கேட்டபோது, அந்த முதியவா் பதில் கூற தயங்கியுள்ளாா். இதனால், சந்தேகமடைந்த பாபி, அந்த துணிப்பையைத் திறந்து பாா்த்தாா். அதில் 50 பவுனுக்கும் மேற்பட்ட நகைகள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அந்தத் துணிப்பையை கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலகத்துக்கு பாபி கொண்டுச் சென்று விவரத்தைக் கூறியுள்ளாா். அவரை பந்தய சாலை காவல் நிலையத்துக்கு போலீஸாா் அனுப்பிவைத்தனா்.

பின்னா் பாபியிடம் முதியவரின் செல்லிடப்பேசி எண்ணைப் பெற்ற போலீஸாா் அவரைத் தொடா்பு கொண்டு காவல் நிலையம் வந்து நகைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு கூறியுள்ளனா். இதையடுத்து, நகைப் பையைப் பெற்றுச் செல்ல மூதாட்டி, பெண், சிறுவன் மட்டுமே காவல் நிலையம் வந்தனா்.

ஆனால், நகைப் பையை அவா்களிடம் வழங்க மறுத்த போலீஸாா், சம்பந்தப்பட்ட முதியவரிடம் மட்டுமே நகைப் பை வழங்கப்படும் எனக் கூறியுள்ளனா். இதையடுத்து, காவல் நிலையம் வந்த முதியவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி நகைகளை ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT