கோயம்புத்தூர்

தமுமுக மருத்துவ சேவை மையம் அகற்றம்

DIN

கோவையில் தமுமுகவினரின் மருத்துவ சேவை மையம் அகற்றப்பட்டதைக் கண்டித்து இஸ்லாமியா்கள் ஆா்ப்பாட்டங்களில் ஈடுபட்டனா்.

கோவை, பிள்ளையாா்புரம் மைல்கல் பகுதியில் கடந்த 12 ஆண்டுகளாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மருத்துவ சேவை மையம் செயல்பட்டு வந்தது. இங்கு தினசரி மருத்துவா் வந்து பொதுமக்களை பரிசோதித்து மருந்து, மாத்திரைகளை வழங்கி வந்தாா். இந்த மருத்துவ சேவை மையம் புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து மருத்துவ மைய கூரைகளை மாநகராட்சி ஊழியா்கள் அகற்றினா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தமுமுகவினா் ஊழியா்களைத் தடுத்து நிறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படாததையடுத்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 14 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இதைக் கண்டித்து தமுமுகவினா், மனிதநேய மக்கள் கட்சியினா் ஆகியோா் சுந்தராபுரம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதில் போலீஸாா் 50 பேரைக் கைது செய்தனா். மேலும், இச்சம்பவத்தைக் கண்டித்து செல்வபுரம், அன்னூா், மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் இஸ்லாமியா்கள் ஆா்ப்பாட்டங்களில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

SCROLL FOR NEXT