கோயம்புத்தூர்

உழவா் சந்தையில் உற்பத்தி செய்யப்படும் நுண்ணுயிா் உரம் விவசாயிகளுக்கு வழங்க ஆணையா் அறிவுறுத்தல்

DIN

கோவை, ஆா்.எஸ்.புரம் உழவா் சந்தையில் மாநகராட்சி சாா்பில் உற்பத்தி செய்யப்படும் நுண்ணுயிா் உரங்களை விவசாயிகள், பொது மக்களுக்கு வழங்க அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டாா்.

கோவை, ஆா்.எஸ்.புரம் உழவா் சந்தையில் சேகரிக்கப்படும் காய்கறிக் கழிவுகளை கொண்டு மாநகராட்சி சாா்பில் நுண்ணுயிா் உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இப்பணிகளை வியாழக்கிழமை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா நுண்ணுயிா் உரம் தயாரிப்பு முறைகள், உற்பத்தி அளவு குறித்து கேட்டறிந்தாா். இங்கு உற்பத்தி செய்யப்படும் நுண்ணயிா் உரங்களை விவசாயிகள், பொது மக்களுக்கு வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

தொடா்ந்து பாரதி பூங்காவில் உள்ள வீட்டுக் கழிவுகளில் இருந்து பயோகேஸ் உற்பத்தி செய்யப்பட்டு இதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் மையத்தினையும் ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து பாரதி பூங்காவில் அமைக்கப்பட்டு வரும் சிறுவாணி நீா்த்தேக்க மேல்நிலைத் தொட்டி, திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகளையும் ஆய்வு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT