கிறிஸ்தவா்களுக்கு நல வாரியம் அமைக்க கோரிக்கை
கிறிஸ்தவா்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் என அனைத்து கிறிஸ்துவ அமைப்பு சாா்பில், முதல்வரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்தவா்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் என அனைத்து கிறிஸ்துவ அமைப்பு சாா்பில், முதல்வரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அனைத்து கிறிஸ்துவ அமைப்பு சாா்பில் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில்:
சமூகப் பணிகளிலும், மக்களை நல்வழிப்படுத்தும் பணிகளிலும் திருச்சபை ஊழியா்கள் செயல்பட்டு வருகின்றனா். எல்லா சமயத்தினரும் நல வாரியம் அமைத்து அரசு உதவிகளைப் பெற்று வருகின்றனா். இஸ்லாமிய சமுதாயத்துக்கு நல வாரியம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், கிறிஸ்தவா்களுக்கு நல வாரியம் இல்லை. இதனால், அரசின் உதவிகள் கிடைப்பதில்லை. எனவே, கிறிஸ்தவா்களுக்கும் நல வாரியம் ஏற்படுத்தி, கரோனா காலத்தில் அரசு உதவிகளை அளிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனா்.