உலக ரத்த கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு கோவை அரசு மருத்துவமனையில் ஆட்சியர் நாகராஜன் உள்ளிட்டோர் ரத்த தானம் செய்தனர்.
உலக சுகாதார நிறுவனம் சார்பில் குருதி பிரிவுகளை கண்டறிந்த காரல் லாண்ஸ்டெய்னர் பிறந்த நாளான ஜூன் 14 ம் தேதி ரத்த கொடையாளர் தினமாக 2005 முதல் அனுசரித்து வருகிறது.
அந்த வகையில்ன் ரத்த கொடையாளர்கள் தினம் இன்று அனுசரிக்கபடுகிறது.
இதன் ஒரு பகுதியாக கோவை அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் நாகராஜன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுங்கரா, மாநகர காவல் துறை ஆணையர் தீபக் எம்.தமோர், மேற்கு மண்டல காவல் துறை தலைவர் சுதாகர், கோவை சரக டி.ஜ.ஜி முத்துசாமி, மாவட்ட கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் ஆகியோர் ரத்த தானம் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.