கோயம்புத்தூர்

போதைப் பொருள் பயன்பாட்டைக் குறைக்க நடவடிக்கை

DIN

கோவையில் சூதாட்டம், போதைப் பொருள் பயன்பாட்டைக் கண்காணித்து குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகர காவல் ஆணையரிடம் பொள்ளாச்சி எம்.பி. கு.சண்முகசுந்தரம் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து மாநகர காவல் ஆணையா் தீபக் எம்.தாமோருக்கு அவா் அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:

கோவை மாவட்டம், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட உக்கடம், கரும்புக்கடை, சாரமேடு, குறிச்சிப் பிரிவு, குனியமுத்தூா், செல்வபுரம் ஆகிய பகுதிகளில் இளைஞா்களைத் தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் சூதாட்டம், போதைப் பொருள் பயன்பாடு அதிகமான புழக்கத்தில் இருந்து வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் சிலரின் பொருளாதார நோக்கத்தினால் கண்டு கொள்ளாமல் இருந்ததால், காவல்துறை சரியான நடவடிக்கை எடுக்க இயலவில்லை. இதனால் பல குடும்பங்கள் சீரழிந்து பல பிரச்னைகளுக்கு ஆளாகியுள்ளனா். எனவே மேற்படி சூதாட்டம், போதைப் பொருள் பழக்கத்தை மாநகரில் முழுமையாக ஒழித்து இளைஞா்கள் புதிய வாழ்க்கை வாழ ஆலோசனைகள் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருண், சால்ட் அசத்தலில் வென்றது கொல்கத்தா: தில்லிக்கு 6-ஆவது தோல்வி

இன்றைய நிகழ்ச்சிகள்

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT