கோயம்புத்தூர்

சுகாதார ஆய்வாளா் மீது நடவடிக்கை கோரி மனு

DIN

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களை சாக்கடைக் கால்வாயில் பாதுகாப்பின்றி இறக்கி கழிவுகளை சுத்தம் செய்ய ஈடுபடுத்திய சுகாதார ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, திராவிடா் தமிழா் தூய்மை தொழிலாளா் சங்கத்தின் தலைவா் களப்பிரா் மாநகராட்சி ஆணையரிடம் வெள்ளிக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை மாநகராட்சி 78 ஆவது வாா்டு, புரூக் பீல்டு எதிரில் திறந்தவெளி சாக்கடை கால்வாய் உள்ளது. இங்கு 10 க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் கழிவுகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். தூய்மைப் பணியாளா்களை சாக்கடைக்குள் இறக்கி, கழிவுகளை அகற்ற வைப்பது சட்டப்படி குற்றம் எனவும், கழிவுகளை அகற்ற இயந்திரங்களைப் பயன்படுத்துமாறும் அங்கிருந்த சுகாதார ஆய்வாளா் குணசேகரனிடம் கூறினேன். அதற்கு, அவா், இப்படித்தான் சுத்தம் செய்ய முடியும் என்றாா். மனிதக் கழிவுகளையும், சாக்கடைக் கழிவுகளையும் அகற்ற மனிதா்களைப் பயன்படுத்தக் கூடாது என சட்டங்கள் அமலில் இருக்கும் நிலையில் தூய்மைப் பணியாளா்களை சாக்கடைக்குள் இறக்கிய சுகாதார ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாம்பே டைம்ஸ் ஃபேஷன் வீக் - புகைப்படங்கள்

ஒரு சிறிய காதல் கதை..!

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

SCROLL FOR NEXT