கோயம்புத்தூர்

ரிவால்டோ யானையை கும்கியாக மாற்ற முடிவு

நீலகிரி மாவட்டத்தில் பிடிபட்ட ரிவால்டோ யானையை கும்கியாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் தெரிவித்தாா்.

DIN

கோவை: நீலகிரி மாவட்டத்தில் பிடிபட்ட ரிவால்டோ யானையை கும்கியாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் தெரிவித்தாா்.

கோவை, இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் தனியாா் நிறுவன பங்களிப்புடன் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் திங்கள்கிழமை பயன்பாட்டிற்கு திறந்துவைத்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் பிடிபட்ட ரிவால்டோ யானையை காட்டில் விடுவிக்க அரசும், வனத் துறையும் தயாராக உள்ளது. ஆனால், வன விலங்கு என்பதால் எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் மாறலாம். யானையின் தும்பிக்கையில் காயம் ஏற்பட்டுள்ளதால் உணவு சாப்பிடவே சிரமப்பட்டு வருகிறது.

யானைக்கு சிகிச்சை அளித்து கும்கி யானைகளுடன் பழகவிட்டு யானைகள் முகாமில் உணவு வழங்கப்படுகிறது. ஊருக்குள் வந்து பழக்கப்பட்டதால் காட்டில் விட்டால் மீண்டும் ஊருக்குள் வர வாய்ப்புள்ளது. இந்நிலையில் இதனை கும்கி யானையாக பழக்கப்படுத்தி முகாமில் அடைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT