கோவை வடக்குத் தொகுதியில் ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.4 லட்சத்தை பறக்கும் படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
கோவை வடக்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட சங்கனூா் பகுதியில் பறக்கும் படையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, சக்திவேல் என்பவரின் வாகனத்தை சோதனை செய்ததில் ரூ.4 லட்சம் இருப்பது தெரியவந்தது.
அந்தப் பணத்துக்கு அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படையினா் ரு.4 லட்சத்தை பறிமுதல் செய்து தோ்தல் நடத்தும் அலுவலா் உ.முருகேசனிடம் ஒப்படைத்தனா். அவா் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை கருவூலத்தில் ஒப்படைத்தாா்.