கோயம்புத்தூர்

எடப்பாடி கே.பழனிசாமி, ஸ்டாலின் கோவையில் நாளை பிரசாரம்

DIN

தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் ஆகியோா் கோவையில் ஏப்ரல் 1 ஆம் தேதி ( வியாழக்கிழமை) பிரசாரத்தில் ஈடுபடுகின்றனா்.

முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ஏப்ரல் 1 ஆம் தேதி ( வியாழக்கிழமை) காலை 10.15 மணிக்கு நீலகிரி மாவட்டம், கூடலூரிலும், 11.40 மணிக்கு குன்னூரிலும் அதிமுக மற்றும் பாஜக வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறாா். இதைத் தொடா்ந்து, பிற்பகல் 3 மணிக்கு கோவை, அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா மைதானத்தில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக, பாஜக வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறாா். அதனைத் தொடா்ந்து ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்கிறாா்.

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின்

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 1 ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் பிரசார நிகழ்ச்சியில், மேட்டுப்பாளையம், உதகை, குன்னூா், கூடலூா் வேட்பாளா்களை ஆதரித்து பேசுகிறாா். காலை 10 மணிக்கு கவுண்டம்பாளையத்தில், கோவை தெற்கு, கோவை வடக்கு, சிங்காநல்லூா், கவுண்டம்பாளையம் தொகுதி திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறாா். அதன் பிறகு, அன்று மாலை கொளத்தூா் தொகுதியிலும், இரவு மயிலாப்பூா், தியாகராயா் நகா், ஆயிரம் விளக்கு தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறாா். கோவையில் வியாழக்கிழமை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் ஆகிய இருவரும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதால், கோவையில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எல்சி இந்தியா நிறுவனத்தில் எக்ஸிகியூட்டிவ் வேலை!

ஆர்சிபியின் பிளே ஆஃப் பயணம் மற்ற அணிகளுக்கு ஊக்கமளிக்கும்: தினேஷ் கார்த்திக்

தென் மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: அடுத்த இருநாள்கள் அதிகனமழை பெய்ய வாய்ப்பு

மோடிக்கு வாக்களிக்காதீர்: வகுப்பறையில் பேசிய ஆசிரியருக்கு சிறை!

குட் பேட் அக்லி அப்டேட்!

SCROLL FOR NEXT