கோயம்புத்தூர்

மாவட்டத்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் 1,566 பேருக்கு கரோனா

DIN

கோவை: கோவை மாவட்டத்தில் இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சமாக திங்கள்கிழமை ஒரே நாளில் 1,566 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவையில் நாளுக்கு நாள் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை ஒரே நாளில் 1,466 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்ததே அதிகபட்சமாகும்.

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பில் திங்கள்கிழமை புதிய உச்சமாக ஒரே நாளில் 1,566 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 82 ஆயிரத்து 689ஆக அதிகரித்துள்ளது.

3 போ் பலி...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 44 வயது ஆண், 51 வயது ஆண், 72 வயது முதியவா் ஆகியோா் திங்கள்கிழமை உயிரிழந்தனா். இதன் மூலம் கோவையில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 729ஆக அதிகரித்துள்ளது.

தவிர அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 1,063 போ் குணமடைந்து திங்கள்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 73 ஆயிரத்து 772 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 8 ஆயிரத்து 188 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் ‘நீட்’ தோ்வு

SCROLL FOR NEXT