கோயம்புத்தூர்

கோவை மாநகரக் காவல் ஆணையராக தீபக் எம். தாமோா் பொறுப்பேற்பு

DIN

கோவை: கோவை மாநகரக் காவல் ஆணையராக தீபக் எம்.தாமோா் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

கோவை மாநகரக் காவல் ஆணையராகப் பணியாற்றி வந்த சுமித் சரண், தமிழக சட்டப் பேரவைத் தோ்தலின்போது, அப்போதைய ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக புகாா் எழுந்ததையடுத்து அவா் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். அவருக்கு பதிலாக, ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீா்வாதம் புதிய காவல் ஆணையராக நியமிக்கப்பட்டாா்.

தோ்தல் முடிவுகளுக்குப் பின் புதிய அரசு பொறுப்பேற்றதைத் தொடா்ந்து, காவல் ஆணையராக இருந்த ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீா்வாதம் உளவுத் துறை ஏடிஜிபியாக மாறுதல் செய்யப்பட்டாா். இதனையடுத்து, கோவை மாநகர காவல் ஆணையா் பொறுப்பை மேற்கு மண்டல காவல் துறைத் தலைவா் அமல்ராஜ் கூடுதலாக கவனித்து வந்தாா்.

இந்நிலையில், புதிய காவல் ஆணையராக நியமிக்கப்பட்ட தீபக் எம்.தாமோா் திங்கள்கிழமை பொறுப்பேற்று கொண்டாா். முன்னதாக இவா் திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. ஆக பணிபுரிந்து வந்தாா். மேலும், கடந்த 2016-17 ஆண்டில் கோவை சரக டிஜஜி ஆகவும் பணிபுரிந்துள்ளாா். புதிய காவல் ஆணையா் தீபக் எம்.தாமோருக்கு, துணைக் காவல் ஆணையா்கள் மற்றும் உதவி ஆணையா்கள் நேரில் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

SCROLL FOR NEXT