கோயம்புத்தூர்

நோயால் அவதி: குட்டையில் விழுந்து இளைஞா் தற்கொலை

DIN

கோவையில் சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்த இளைஞா் குட்டையில் விழுந்து செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை, ராமநாதபுரம் அருகே உள்ள கணேசபுரத்தைச் சோ்ந்தவா் சங்கா்(33). தனியாா் நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வந்தாா். இவா் கடந்த சில மாதங்களாக சிறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டு வந்துள்ளாா். இதற்காக, பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் நோய் குணமடையாததால், மன விரக்தி அடைந்து காணப்பட்டுள்ளாா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை சுங்கம் பேருந்து பணிமனை அருகே உள்ள குட்டையில் குதித்து தற்கொலை செய்துகொண்டாா். தகவலறிந்து, சம்பவ இடத்துக்குச் சென்ற ராமநாதபுரம் போலீஸாா், சங்கரின் உடலைக் கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து போலீஸாா் மேலும் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

SCROLL FOR NEXT