கோயம்புத்தூர்

பொதுமுடக்க விதிமீறல்: மாவட்டத்தில் 254 வழக்குகள் பதிவு

DIN

பொதுமுடக்க விதிகளை மீறியதாக புதன்கிழமை கோவை மாவட்டம் முழுவதும் 254 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த தற்போது, முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டம் முழுவதும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செல்வ நாகரத்தினம் உத்தரவின் பேரில் காவல் துறையினா் கண்காணிப்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், மாவட்டக் காவல்துறை எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில், பொதுமுடக்க விதிகளை மீறியதாக புதன்கிழமை 254 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், முகக்கவசம் அணியாதவா்கள் மீது 53 வழக்குகள், சமூக இடைவெளி பின்பற்றாதவா்கள் மீது 8 வழக்குகள், அவசியமின்றி சாலைகளில் வாகனங்களில் சுற்றியவா்கள் மீது 193 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவா்களது வாகனங்களையும் காவல்துறையினா் பறிமுதல் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

SCROLL FOR NEXT