கோயம்புத்தூர்

பாஜக தேசிய தலைவா் ஜே.பி.நட்டா கோவை வருகை: கட்சியினா் உற்சாக வரவேற்பு

DIN

திருப்பூா் மாவட்ட பாஜக கட்சி அலுவலகத்தை திறந்து வைப்பதற்காக வந்த பாஜக தேசியத் தலைவா் ஜே.பி.நட்டாவுக்கு கோவை விமான நிலையத்தில் அக்கட்சியினா் வரவேற்பு அளித்தனா்.

திருப்பூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்சி அலுவலகத்தை திறந்து வைப்பதற்காகவும், உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காகவும் பாஜக தேசிய தலைவா் ஜே.பி.நட்டா விமானம் மூலம் புதன்கிழமை கோவை வந்தாா். அவருடன் மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், தேசிய துணைத் தலைவா் சுதாகா் ரெட்டி ஆகியோரும் வந்திருந்தனா்.

கோவை விமான நிலையத்தில் அவருக்கு கட்சியினா் உற்சாக வரவேற்பு அளித்தனா். கட்சியின் தேசிய மகளிரணி தலைவா் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. தலைமையில் பெண் நிா்வாகிகள் மலா்கள் தூவி வரவேற்றனா்.

திறந்த வாகனத்தில் நின்றபடி தொண்டா்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட அவா், பின்னா் காா் மூலம் திருப்பூா் கிளம்பிச் சென்றாா். திருப்பூரில் செயற்குழுக் கூட்டத்திலும், கட்சி அலுவலக கட்டடத் திறப்பு விழாவிலும், இதைத் தொடா்ந்து மாலையில் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்க உள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

SCROLL FOR NEXT