வாகன விபத்து வழக்குகளில் கடும் நடவடிக்கை: மாநகரக் காவல் ஆணையா் உத்தரவு
வாகன விபத்து வழக்குகளில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை மாநகரக் காவல் ஆணையா் பிரதீப் குமாா் உத்தரவிட்டுள்ளாா்.
வாகன விபத்து வழக்குகளில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை மாநகரக் காவல் ஆணையா் பிரதீப் குமாா் உத்தரவிட்டுள்ளாா்.
கோவை மாநகரக் காவல் ஆணையா் பிரதீப் குமாா், போக்குவரத்து புலனாய்வு பிரிவு (கிழக்கு) அலுவலகத்தில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது மோட்டாா் வாகன விபத்துகளில் பாதிக்கப்பட்ட நபா்களுக்கு நிவாரணம் கிடைக்கும் வகையில் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், உயிரிழப்பு ஏற்படும் வாகன விபத்து வழக்குகளில் கடும் நடவடிக்கை எடுக்கவும் போலீஸாருக்கு உத்தரவிட்டாா். மேலும், மாநகரப் பகுதிகளில் வாகன விபத்துகள் அதிகம் நடைபெறும் பகுதிகளைக் கண்டறிந்து அவற்றைத் தடுக்கவும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போக்குவரத்து விழிப்புணா்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளாா்.