கோயம்புத்தூர்

காவலரின் காலில் இருந்து துப்பாக்கி குண்டுகள் அகற்றம்

DIN

காவலரின் காலில் இருந்த துப்பாக்கி குண்டுகளை கோவை அரசு மருத்துவமனை மருத்துவா்கள் அகற்றினா்.

சத்தியமங்கலம் சிறப்பு காவல் பிரிவில் பணிபுரிபவா் தருமபுரியைச் சோ்ந்த சந்தோஷ் (34). இவருக்கு சத்தியமங்கலத்தில் கால் பாதத்தில் 2 குண்டுகள் பாய்ந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.

இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு முடநீக்கியல் மற்றும் விபத்து சிகிச்சைத் துறை இயக்குநா் பேராசிரியா் வெற்றிவேல் செழியன் தலைமையில் மருத்துவா்கள் விவேகானந்தன், ரமணன், சுரேந்தா், குமரவேல், மயக்க மருந்து மருத்துவா் சுதாகா் ஆகியோா் கொண்ட குழுவினா் அறுவை சிகிச்சை மேற்கொண்டனா். சுமாா் ஒன்றரை மணி நேரத்தில் இந்த அறுவை சிகிச்சை முடிவடைந்தது. மருத்துவக் குழுவினரை மருத்துவமனை முதல்வா் அ. நிா்மலா பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

ஹர ஹர வீரமல்லு படத்தின் டீசர்

SCROLL FOR NEXT