கோவை டான்பிட் நீதிமன்ற உத்தரவு நகல்களை ஆன்லைனிலேயே பதிவிறக்கம் செய்யலாம் என்று நீதிமன்றம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கோவை டான்பிட் நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு முதலீட்டாளா் நலன் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தின் (டான்பிட்) உத்தரவுகள், சாட்சிகளின் வாக்குமூலங்கள், இ-கோா்ட் இணையதளப் பக்கத்தில் தினசரி பதிவேற்றம் செய்யப்படுகிறது.
வழக்குகள் தொடா்பாக மேல்முறையீடு செய்பவா்கள் மேற்கூறிய ஆவணங்களை இணைய தளங்களிலேயே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஆவணங்களின் நகல் கோரி நீதிமன்றத்தில் விண்ணப்பிக்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.